மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக தூதரகங்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து இடம்பெறக்கூடிய வன்முறைகள் அல்லது போராட்டங்களைத் தடுத்ததே இந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்.
இது குறித்த மேலதிக விபரங்கள்:
பாதுகாப்பு பலப்படுத்தல்: பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், சுற்றுலாப் பொலிஸ் பிரிவு உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே பலப்படுத்தியுள்ளன.
சபாட்’ (Chabad) மையங்கள்: குறிப்பாக நாட்டிலுள்ள ‘சபாட்’ மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பை வழங்கவும், இராஜதந்திர வலயங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்கொண்டுள்ள சவால்கள்
இந்த பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் திணைக்களம் கடுமையான உத்தியோகத்தர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தூதரகங்களுக்கு 24 மணி நேர நிலையான பாதுகாப்பை வழங்குவது சவாலாக மாறியுள்ளது.
மேலும், கொழும்பு பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் கூட்டக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்காக பெருமளவிலான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் இந்த நிலைக்கு ஒரு காரணமாகும். இருப்பினும், அந்தப் போட்டிகள் நிறைவடைந்தவுடன் அந்த அதிகாரிகளும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
