Our Feeds


Tuesday, March 10, 2026

Zameera

லெபனானில் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு


 தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனின் சையத் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரானின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல், லெபனான் மீது பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »