Our Feeds


Monday, March 9, 2026

Zameera

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகிறது – சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்


 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார்.


ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்பதே சுவிஸ் அமைச்சரவையின் கருத்தாகும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் தாக்குதல்கள் வன்முறைத் தடையை மீறுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் போரை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தினார்.


அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.


இதன் மூலம், ஈரானைப் போலவே அவர்களும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர் என்று பிபிஸ்டர் தெளிவுபடுத்தினார்.


ஜேர்மனி மற்றும் ஸ்பெயினின் நிலைப்பாடு இந்தக் கருத்துக்கள் ஜேர்மனியின் உப ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பெயிலின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.


இந்தப் போர் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானது என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


விதிகள் இல்லாத, வலிமையானவர்களின் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு உலகிற்குள் நாம் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக கிளிங்பெயில் எச்சரித்துள்ளார்.


இதேவேளை, ஈரான் மீதான குண்டுவீச்சுகளைப் பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது என ஸ்பெயின் நாடும் கண்டித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »