Our Feeds


Tuesday, March 3, 2026

Zameera

வரிசைகளில் நின்று தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் - ஜனாதிபதி


 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், நாட்டின் எரிபொருள் கையிருப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (03) பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.


அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

​தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொதுமக்கள் வரிசைகளில் நின்று தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.


​டீசல்: 33 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது.


​பெட்ரோல்: தற்போது 27 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது.


​எதிர்கால வரவு: எதிர்வரும் (07) மற்றும் (08) ஆம் திகதிகளில் 35,000 மெட்ரிக் தொன் பெற்ரோல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.


இதன் மூலம் பெற்ரோல் கையிருப்பு 40 நாட்கள் வரை அதிகரிக்கும்.


​விமான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ​விமான எரிபொருள் (Jet A-1): 49 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது.


​கச்சா எண்ணெய்: சுத்திகரிப்பு நிலையத்தை தடையின்றி இயக்குவதற்கு 44 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதுடன், ஒரு கப்பல் தற்போது நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.


​ இலங்கையின் களஞ்சியப்படுத்தும் வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால், கப்பல்கள் வரும் கால அட்டவணைக்கு ஏற்ப பழைய கையிருப்புகளை காலி செய்து, புதிய கையிருப்புகளை நிரப்பும் பணி விஞ்ஞான ரீதியாக முன்னெடுக்கப்படுகிறது.


​தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய கிழக்கு போர் விரிவடைந்தால் அது உலகளாவிய பிரச்சினையாக மாறக்கூடும்.


இருப்பினும், தற்போதைய நிலையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி உறுதியளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »