Our Feeds


Monday, March 23, 2026

Zameera

இலங்கையில் எரிபொருள் இல்லை : போலித் தகவல் பரப்பியவர் கைது


 இலங்கையில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்களில் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.



வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்கப்படுத்துவதற்கும், சுற்றுலாத் துறையை சீர்குலைப்பதற்கும் மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »