சர்வதேச சட்டத்தின் மீதான அப்பட்டமான
அத்துமீறல்களை அரசாங்கம் கண்டிக்கவில்லை.பாராளுமன்றதில் ஹக்கீம் காட்டம்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இப்போது நமது பொருளாதாரத்தையும் முழு உலகப் பொருளாதாரத்தையும் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கின் தற்போதைய போர்.
இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் நான் ஒரு எளிய கேள்வியைக் கேட்க நேர்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
சர்வதேச சட்டத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறி, ஈரானின் உயர் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்தச் செயலை பகிரங்கமாக கண்டிக்கவும், ஈரான் மக்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் தயாரா?
அவர் சொன்னது என்னவென்றால், அவர் மதிய நேரம், ஈரான் தூதுவரின் இல்லத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடப் போகிறார் என்பதாகும்.
இது என்ன ஒரு கேலிக்கூத்து ? நமது அரசாங்கம் இந்த நிலைக்குக் கீழே இறங்கியுள்ளது.
ஈரான் ,இலங்கைக்கு ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு சர்வதேச தளத்திலும் உதவிய நாடு.
இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் போதெல்லாம் அவர்கள் முன்னணியில் இருந்தனர், ஆனால், இப்போது இவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள், ஏனென்றால், இவர்கள் அமெரிக்காவிற்கு பயப்படுகிறார்கள்.
கடந்த காலத்தில் இவர்கள் அமெரிக்காவை 'பெரிய சாத்தான்' என்று அழைத்தனர், அவர்கள் அமெரிக்கர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டித்தனார்.
இப்போது அவர்கள் அவற்றை முற்றிலும் மறந்துவிட்டார்கள்.
இப்போது இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
பிரதமர் மோடியும் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்துள்ளார். அவர் அமெரிக்காவைக் கண்டிக்கவில்லை.
ஈரானின் உயர்மட்டத் தலைவரின் மறைவுக்கு அவர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
அதற்காக அங்குஎதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி இது நடுநிலைமை அல்ல, இது அமெரிக்கர்களிடம் முழுமையாக அடிபணிந்த அடிமைத்தனம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் இதைக் கண்டித்துள்ளார், இந்தியாவின் மாநில முதல்வர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
ஆனால் நமது அரசாங்கம் இன்னும் தயாராக இல்லை. நேற்று ஜனாதிபதி சபைக்கு வந்தபோது நான் இதைப் பகிரங்கமாக அவரிடா. கேட்டேன்.
அங்கு அவர் பெட்ரோல் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்.
கூடுதல் சேமிப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றெல்லாம் கூறினார்.
ஆனால் ,ஒரு நட்பு நாட்டின் தலைவரின் மரணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சர்வதேச சட்ட மீறலை பகிரங்கமாக கண்டிக்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ அவர்கள் தயாராக இல்லை. நாம் இவ்வளவு மோசமான நிலைக்கு வந்துவிட்டோம்.
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கருணையும் துணிச்சலும் நமக்கு இருக்க வேண்டும். ஒரு நாள் இது போன்ற விஷயங்கள் நமக்கு நடக்கும்போது
நாம் ஒரு பயங்கரமான நிலையில் இருப்போம். இது முதல் முறை அல்ல, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பகிரங்கமாக கடத்தப்பட்டபோது
வெனிசுலாவின் தலைநகரைத் தாக்கிய பிறகு, இந்த அரசாங்கம் அது பற்றி எதுவும் சொல்லவில்லை.
வெனிசுலா சேகுவேராவையும் அவரது கொள்கைகளையும் பின்பற்றும் ஒரு நாடு. இவர்களும் சேகுவேராவின் கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் அமைப்பைத் தொடங்கினர்.
ஆனால் இப்போது அவர்கள் சேகுவேராவை மறந்துவிட்டார்கள்; மதுரோவை மறந்துவிட்டார்கள், அவர்கள் இப்போது முதலாளித்துவ நாடுகளுடன் நெருக்கமாகிவிட்டார்கள்.
பின்னர் என்ன நடந்தது? ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் கத்தார் மத்தியஸ்தராக இருந்தபோது இஸ்ரேல் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே இஸ்ரேல் கத்தாரைத் தாக்கியது. அப்போதும் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
அவர்கள் குற்றவாளியின் பெயரைச் சொல்லவில்லை, எதையும் சொல்லவில்லை. நாடுகள் அமைதியைப் பேண வேண்டும் என்று மட்டும் சொன்னார்கள்.அவ்வாறு
இஸ்ரேலால் கத்தார் தாக்கப்பட்டபோது கூட இஸ்ரேலின் பெயரைச் சொல்லிக் கண்டிக்க அவர்களுக்குத் துணிச்சல் இல்லை.
இப்போது அமெரிக்க-இஸ்ரேல் குண்டுவீச்சால் குறிவைக்கப்பட்ட ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயர்மட்டத் தலைவர் தியாகியான நிலையில்
குற்றவாளிகளின் பெயரைச் சொல்லவோ அல்லது சர்வதேச சட்டத்தின் மீதான இந்த அப்பட்டமான அத்துமீறலைக் கண்டிக்கவோ முடியாத அளவுக்கு அவர்கள் கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுவிட்டனர்.
சவுதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகள் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.
நேற்று நான் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தேன், அதில் குறிப்பிட்டதாவது
"சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுடன் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
பிராந்திய மோதல் மற்றும் உலகளாவிய ஸ்திரமின்மை குறித்த அச்சம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான இராஜதந்திரத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
இஸ்ரேலின் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை உட்பட, நாடுகளின் அமைதியான அணுசக்தி பயன்பாட்டு உரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், போர் பதற்றம் குறைய வேண்டும்.
இது பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டுப் பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு சிறந்த மத்திய கிழக்கை உருவாக்க வேண்டும்."என குறிப்பிட்டிருந்தேன்.
கொழும்பில் உள்ள வளைகுடா நாடுகளின் தூதுவர்கள், குறிப்பாக சவுதி அரேபிய தூதரகம்
ஈரானின் நடவடிக்கைகள் குறித்த தங்கள் ஆத்திரத்தைப் பகிர்ந்து கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
தங்களை நடத்தும் நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் முறையான இலக்குகளாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் அவர்கள் அமெரிக்கத் தளங்களைத் தாண்டிச் சென்றுள்ளனர்.
எரிவாயு மற்றும் பெட்ரோலிய முனையங்கள், சில ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையங்களையும் அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
எதிரி விமானத் தளங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று ஈரான் வாதிடுகிறது.
ஈரானின் நியாயப்படுத்தல்கள் இருந்தபோதிலும், வளைகுடா நாடுகளும் சவுதி அரேபியாவும் தங்கள் இறையாண்மை மீறப்பட்டதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளன.
நான் இங்கே மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், இந்தச் சம்பவங்கள் நடந்தபோதிலும்
அந்த நாடுகளின் முதிர்ச்சியடைந்த, நடைமுறைவாதத் தலைமை இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் பெரும் நிதானத்தைக் காட்டியுள்ளது.
இந்த புனித ரமழான் மாதத்தில், அமெரிக்க-இஸ்ரேல் பொறியில் சிக்காமல் இருக்கும் அவர்களின் முதிர்ச்சி மற்றும் அணுகுமுறை பாராட்டப்பட வேண்டும்.
ஹென்றி கிஸிஞ்சர் ஒருமுறை சொன்னதை நான் இங்கே நினைவுபடுத்த வேண்டும்: "அமெரிக்காவிற்கு எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அதன் நண்பனாக இருப்பது உயிருக்கே ஆபத்தானது (fatal)."
இதைத்தான் கிஸிஞ்சர் சொன்னார். இந்த மத்திய கிழக்கு நாடுகள் ஈரானால் தாக்கப்பட்டாலும்,
அது தூண்டுதலாகத் தெரிந்தாலும், அமைதிக்காகச் சில எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர மறுக்கின்றன.
இந்த புனித ரமழான் மாதத்தில் அவர்கள் செய்வதற்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
ஜோன் எஃப். கென்னடி சொன்னதை மேற்கோள் காட்டுகிறேன்.
ஜோன் எஃப். கென்னடி இப்படிச் சொன்னார் :
"புலியின் முதுகில் சவாரி செய்பவர்கள் பெரும்பாலும் அதற்குள்ளேயே (புலியின் வயிற்றிற்குள்ளேயே) முடிந்துவிடுவார்கள்."
நமது அரசாங்கம் உட்பட உலகில் எங்கும் யாராவது இதுபோன்ற செயல்களை அனுமதித்தால் இதுதான் நடக்கும்.
நடுநிலைமை என்ற பெயரில் நாம் மௌனமாக இருந்தால் நாம் கொடுக்க வேண்டிய விலை இதுவாகத்தான் இருக்கும்.
இது நடுநிலைமை அல்ல, இது நமது இறையாண்மையைக் கைவிடுவது.
இது ஏகாதிபத்திய அமெரிக்கர்களுக்கும் சியோனிச இஸ்ரேலுக்கும் அடிபணிந்து போவதாகும். நன்றி.
(தொகுப்பு:விருட்சவேந்தன்)
