இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள
ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Bushehr இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்தக் கப்பல் பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள 208 பணியாளர்களையும் பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
