Our Feeds


Tuesday, March 17, 2026

Zameera

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசலை தவிர்க்க QR குறியீடு


 எரிபொருள் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வரிசைகளை உருவாக்க வேண்டாம் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 


விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், இந்த முறையான மேலாண்மை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 


தற்போதைய உலகளாவிய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாட்டின் எரிபொருள் கையிருப்பைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 


எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற நெரிசலைத் தவிர்ப்பதற்காக, QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டத்தை வார இறுதி நாட்களிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


வாகன உரிமை மாற்றம் மற்றும் மொபைல் போன் எண்கள் தொடர்பான முறைமையில் இதற்கு முன்னர் காணப்பட்ட சிக்கல்களுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. 


அத்துடன், முறைமையிலிருந்து வாகனங்களை நீக்கும் வசதியும் தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். 


நாளை காலைக்குள் அனைத்து தொழில்நுட்பத் தடைகளும் நீக்கப்பட்டு மக்கள் எளிதாக சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »