Our Feeds


Monday, April 27, 2026

Zameera

இலங்கை திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: கொழும்பில் திரண்ட போராட்டக்காரர்கள்


 இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (27) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக சர்வஜன அதிகாரம் அமைப்பினர் இன்று காலை பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பொதுமக்களின் வரிப்பணம் முறையாகக் கையாளப்படாமை குறித்து இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.


இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் இந்த நிதி மோசடிக்கு எதிராக இன்று காலை இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அத்துடன், அரகலயவின் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு எதிர்ப்புப் போராட்டமும் இன்று மத்திய வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது. அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளே இவ்வாறான நிதி இழப்புகளுக்குக் காரணம் என இதன்போது போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.    

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »