Our Feeds


Friday, April 24, 2026

Sri Lanka

மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு | A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு



2026ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


அதேநேரம் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


எனவே இதுவரை 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »