Our Feeds


Friday, April 24, 2026

Sri Lanka

வெளியில் தெரியும் பழைய சிதைவுகள் | கடும் வறட்சி மலையகத்தின் மிக முக்கிய நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி



மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 


மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் இன்று (24) காலை 6 மணி நிலவரப்படி, நீர்மட்டமானது வான் மட்டத்திலிருந்து 50 அடி 11 அங்குலம் வரை குறைவடைந்துள்ளது. 


எனினும், நேற்று (23) இப்பகுதிக்கு 12 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது வான் மட்டத்திலிருந்து 40 அடி 10 அங்குலம் வரை குறைவடைந்துள்ளது. 


இந்த நீர்த்தேக்கப் பகுதிக்கு நேற்று 14 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர். 


இந்த இரண்டு நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது நீரில் மூழ்கியிருந்த பழைய சிதைவுகள் மற்றும் பல தீவுகள் தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன. 


விமலசுரேந்திர, லக்ஷபான, புதிய லக்ஷபான, கெனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் இந்த நீர்த்தேக்கங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »