ஏப்ரல் மாதத்தில் மட்டும் 117,893 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்தியாவிலிருந்து 35,862 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,585 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 9,142 பேரும் சீனாவிலிருந்து 8,543 பேரும் ரஷ்யாவிலிருந்து 6,172 பேரும் இலங்கைக்க வருகை தந்துள்ளனர்.
