இன்று ஆட்சியில் இருப்பது கொள்ளையர்களின் அரசாங்கம் என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பட்டப்பகலில் திறைசேரியை கொள்ளையடித்துள்ளது. பிக்பொக்கட் (பணப்பையை) அடிப்பவர் திருடன் என்று கூறிக்கொண்டு சுற்றித் திரிகின்றான். அந்த திருடர்கள் சொல்வதைக் கேட்டு அப்பாவி மக்கள் அவனைத் துரத்திச் செல்கின்றனர்.
அந்த திருடன் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிடுகிறான். அரசாங்கமும் அப்படித்தான். அரசு பதவியேற்ற நாள் முதல், ஒருபுறம் முந்நூற்று இருபத்து மூன்று கொள்கலன்கள் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டுள்ளன.
துறைமுகத்திலிருந்து போதைப்பொருள் கொள்கலன்கள் கடத்தப்பட்டுள்ளன. மறுபுறம், நிலக்கரி மோசடி செய்யப்படுகின்றது. இப்போது நிதி அமைச்சின் கணக்கிலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளதென்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
