Our Feeds


Tuesday, April 28, 2026

Zameera

திறைசேரி சைபர் திருட்டு: அதிகாரிகள் COPFக்கு அழைப்பு


 மகா திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரை அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குறித்த குழுவின் முன்னிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆஜராகுமாறு இந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »