Our Feeds


Thursday, May 21, 2026

Zameera

இந்த ஆண்டில் மட்டுமே 128 காட்டு யானைகள் உயிரிழப்பு


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் துப்பாக்கிச் சூட்டு காயங்களினால் 20 காட்டு யானைகளும் மின்சாரம் தாக்கியதால் 15 யானைகளும் பட்டாசு வெடிப்பினால் 10 யானைகளும் விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததால் 05 யானைகளும் உயிரிழந்துள்ளன

இவற்றுக்கு மேலதிகமாக விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற விபத்துக்களினாலும் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை, அனுராதபுரம் பிராந்தியங்களிலேயே இம் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் இதுவரை காலப்பகுதியில் 35 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »