நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகளின் மூலம், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தின (15) அறிக்கையின்படி, 26,880 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 269 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 198 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
