டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததனால் இனி வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் முதல் சமூக பாதுகாப்பு வரி 2.5% ஆக அதிகரித்துள்ளதுடன், வெளிநாட்டு செலாவணி விகிதங்களும் அதிகரித்துள்ளன.
இதனால் வாகனங்களின் விலையில் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
