“அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்’’ நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மூத்த உலமா பெருமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு, பிரதம அதிதிகளாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர், காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றதுடன், நாடு முழுவதிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலமாக்கள் பங்கேற்றிருந்தனர்.








