Our Feeds


Saturday, May 23, 2026

Zameera

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு - ஜனாதிபதி

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


நேற்று வெள்ளிக்கிழமை (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுவது என்பது ஒரு நிர்வாகப் பணியே தவிர, அது அரசியல் பணி அல்ல என்றார். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »