முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர்.
கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர்.
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இரண்டு மீனவர்களும் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதன்காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-
