போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தென்பட்ட பின்னணியிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், மிகவும் நிலையான அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
