இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ள லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்தும் அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
