Our Feeds


Tuesday, June 30, 2026

Admin

பலத்த பாதுகாப்புடன் நீதி மன்றம் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் | மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்த நீதிபதி



பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை ஜூலை 13ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையானுக்கு, நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது. 


கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »