*சவூதி நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட சப்ரகமுவ
மருத்துவ பீடம் இன்று திறந்து வைக்கப்படுகிறது*சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நவீன மருத்துவ பீட வளாகம், மாணவர் விடுதிகள், நூலகம், 1,000 ஆசனங்கள் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பேராசிரியர்கள் பிரிவு (Professorial Unit) ஆகிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதியானது இலங்கையின் 10ஆவது மருத்துவ பீடமாகும். இது மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், நாட்டில் நிலவும் சுகாதாரத்துறை நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
