Our Feeds


Friday, August 21, 2026

ShortNews

22க்கு எதிரான மேலும் 2 மனுக்கள்!


22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கிடைக்கப்பெற்ற 7 பிரதிகளுக்கு மேலதிகமாக, இந்த இரண்டு மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) பாராளுமன்றில் அறிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சபாநாயகருக்கு மூன்று மனுக்களின் பிரதிகள் கிடைத்திருந்தன.

நேற்றைய தினம் (20) மேலும் 4 மனுக்களின் பிரதிகள் அவருக்குக் கிடைத்திருந்தன.

இதற்கமைவாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக சபாநாயகருக்கு இதுவரை 9 மனுக்களின் பிரதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »