அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
'வினிவித' அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்ட மூலத்தை சவால் செய்து இதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறையாண்மை மற்றும் நீதிமன்றத்தின் சுதந்திரம் என்பன பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அதனை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படின் குறித்த சட்ட மூலம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்குமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
Monday, August 24, 2026
22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
