பாராளுமன்ற வட்டாரங்களின் தகவல்படி, இது தொடர்பான விசாரணைப் பணிகள் தற்போது பெரும்பாலான அளவில் நிறைவடைந்துள்ளன.
அறிக்கையின் வரைவு (Draft) முதலில் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்களின் பரிந்துரைகள் மற்றும் அவதானிப்புகளை உள்ளாக்கிய பின்னரே இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.
விசேட குழுவை அமைக்கும் போது நிறைவேற்றப்பட்ட முன்மொழிவின் படி, அதன் முதல் கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக முன்னர் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களைப் பாராளுமன்றக் குழுவின் முன் அழைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்திருந்தது
எனினும், அந்த ஆணைக்குழு ஏற்கனவே தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதால், அதன் உறுப்பினர்களை மீண்டும் அழைப்பதற்கான அவசியம் இல்லை எனப் பாராளுமன்றக் குழுவின் தலைவர் தீர்மானித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இந்த பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராகச் செயற்படுகிறார்.
