Our Feeds


Friday, August 28, 2026

ShortNews

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 547 சடலங்கள் மீட்பு!


இமாலய மலைத்தொடரின் நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த 547 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் தேசிய அனர்த்த இடர் குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபையின் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டனர்.

வெளிநாட்டினர் 517 பேர் உட்பட 977 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »