Our Feeds


Sunday, August 23, 2026

SHAHNI RAMEES

விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரதமர்!


விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு

தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.


யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்  சனிக்கிழமை (22) நடைபெற்ற நிகழ்வில்  பிரதமர்  கலாநிதி ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.





இதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதோனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.



நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »