நேபாளத்தில் ஏற்பட்ட அசுரத்தனமான பெருவெள்ளத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சூழலில், வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த இரட்டைக் குழந்தைகளை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 26ஆம் திகதி இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவு மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினரும் இராணுவத்தினரும் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
