Our Feeds


Wednesday, September 2, 2026

ShortNews

22 க்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற தீர்மானம் சபாநாயகருக்கு!


22 ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அந்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான இரகசியத் தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக இன்று (2) உயர்நீதிமன்றம் அறிவித்தது.

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையானது நேற்றும் (1) இன்றும் (2) இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் அமர்வின் முன்பாக இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »