தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
