உயிரளவியல் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக இன்று (15) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“கண்காணிப்பு அரசுக்கு வழிவகுக்கும், இந்தியாவுக்கு தரவுகளைத் தாரைவார்க்கும் உயிரளவியல் தரவு அடையாள அட்டையை எதிர்ப்போம்”, “இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தங்கள் 7ஐயும் வெளிப்படுத்துக” உள்ளிட்ட தொனிப்பொருள்களை முன்வைத்து, மக்கள் போராட்ட இயக்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.