கடந்த மே மாதம் கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடம் பெற்ற வன்செயல்களின் போது சேதங்களுக்குள்ளான பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கென 67 ½ இலட்சம் ரூபா திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.கே முஹைஸ் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களின் புனரமைப்புப் பணிகளின் தாமதத்திற்குக் காரணம் திறைசேரியினால் உரிய நிதி இதுவரை வழங்கப்படாமையே எனவும் அவர் கூறினார்.
