இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதைக் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் சிலரை சந்தித்தபோதே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
