Our Feeds


Saturday, August 17, 2019

www.shortnews.lk

225 MP க்களையும் தியவன்னா ஓயாவுக்குள் தள்ளி விட்டு புதிய 225 MP க்களை தெரிவு செய்ய வேண்டுமென சிலர் விரும்புகிறார்கள் - பிரதமர்

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் தியவன்னா ஓயாவுக்குள் தள்ளிவிட்டு, புதிதாக 225 பேரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள். மேலும் சிலர் நாட்டின் தேசிய கொள்கை மற்றும் வழிமுறைகளிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். நானும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். ஆனால் அந்த மாற்றம் நபர்களிலன்றி, நாட்டின் தேசிய கொள்கையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »