Our Feeds


Sunday, September 15, 2019

www.shortnews.lk

சஜித்தை களமிறக்க ரனில் மறைமுக இணக்கம் வேட்பாளர் அறிவிப்பு இந்த வாரம் - நளின் பண்டார

 


எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இல­குவில் வெற்­றி­கொள்ள கூடி­ய­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பா­லான கட்­சிகளின் ஆத­ரவை பெற்­ற­வ­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸவை இவ்­வா­ரத்­துக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­விப்பார் என்றும்  சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் மறை­மு­க­மான இணக்­கத்தை தெரி­வித்­துள்­ள­தா­கவும் பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்­துள்ளார்.
 இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யினர் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். அவ்­வாறு எந்­த­வொரு பிளவும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் கிடை­யாது. கட்­சியில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு நிலைப்­பாடு உள்­ளது. 

அதையே அவர்கள் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். அதை கட்­சியின் பிளவு என அர்த்­தப்­ப­டுத்­திக்­கொள்ளக் கூடாது. எவ்­வாறு இருப்­பினும் கட்­சியின் இறுதித் தீர்­மா­னத்­திற்கு உடன்­பட்டு உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »