பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் இலங்கையைப் போன்றே சவுதி அரேபியாவினதும் குறிக்கோளாகும் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின், பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ வரையறுக்கப்பட்டது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள சவுதி அரேபியாவின் சபாநாயகர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
