சஜித் பிரேமேதாச வெற்றிபெற்றால் எமது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் மாற்று கட்சியினர் வந்தால் மக்கள் சுதந்திரமாக வாழமுடியாத ஒரு நிலமை வரும்.
எனவே மலையக மக்கள் தெளிவு பெற்று எதிர்வரும் நவம்பர் மாதம் சஜித் பிரேமேதாசவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக கடந்த பத்து வருடங்களாக கூறி வருகிறார்கள் கம்பனிகார்கள் கூற வேண்டும் ஆயிரம் ரூபா தருவதாக ஜனாதிபதி கூறி ஏற்று கொள்ளமுடியாது
அரசாங்கம் தனியார் கம்பனிக்கு நிதி வழங்கமுடியாது, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கொள்ள மலையக மக்கள் சஜித் பிரேமேதாசவுக்கு வாக்களிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.
