முஸ்லிம்களுக்கு அமைச்சு பதவி வழங்காமைக்கு அதிருப்தி
124 உள்ளூராட்சி சபை முஸ்லிம் உறுப்பினர்கள் சு.க வை விட்டு வெளியேற முடிவு
புதிய அரசின் பங்காளிக் கட்சியான சு.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களில் எவருக்கும் வழங்கப்படாமையை எதிர்த்து தாம் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக 124 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனவிடம் நேரில் தெரிவித்துள்ளனர். சந்திப்பின் போது, முஸ்லிம்களிலும் அமைச்சுப் பதவி வழங்குமாறு தாம் சிபாரிசு செய்த கடிதத்தை மைத்திரி உறுப்பினர்களுக்கு காண்பித்துள்ளார்.
