ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தனது வருட இறுதி ஓய்வை முடித்துக் கொண்டு நாளை நாடு திரும்புகிறார்.
கொழும்பு வந்த கையோடு அவர் சஜித் பிரேமதாச உட்பட்ட கட்சி முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். புதிய வருடத்தில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதேவேளை கட்சித் தலைவருடன் தீர்க்கமான பேச்சு நடத்திய பின்னர் புதிய அரசியல் கூட்டணி ஒன்றுக்கு தலைமை தாங்குவது குறித்து சஜித் தீர்மானிப்பாரென தெரிகிறது.
