கடந்த வருடம் 04/21 உயிர்த்த ஞாயிறு அன்று குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் செயல்பாடுகளுக்கும் NTJ - எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் நிதியுதவி வழங்கிய 07 நபர்களை CID தேடி வருகின்றது.
02 மருத்துவர்களும், பொறியியலாளர்கள் 2 பேரும், சட்டத்தரணி ஒருவரும், வாகன விற்பனையாளர்கள் 2 பேரையும் தான் CID தற்போது தேடி வருகின்றது.
இவர்கள் அனைவரும் அமெரிக்கா, துருக்கி மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக சந்தேகிக்கும் CID யினர் அவர்களை அங்கிருந்து அழைத்து வர இன்டர்போல் பொலிசார் மற்றும் சர்வதேச உளவுத்துறையின் உதவியை நாடியுள்ளதாக அறிய வருகிறது.
