உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா எனப்படும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விட அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சீனாவில் 80,928 பேர் பாதிக்கப்பட்டு சுமார் 3,245 பேர் மரணமடைந்தனர்.
இதே வேலை சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா இத்தாலியில் தொற்ற ஆரம்பித்து இதுவரை 41000ம் பேர் பாதிக்கப்பட்டு 3,405 பேர் மரணமடைந்துள்ளனர்.
சீனாவை விட இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
