மட்டக்களப்பு பெட்டிக்கலோ கெம்பஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அரசிடம் கோரிக்கை வைக்கும் விதமான பதாதைகளை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.



