இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பந்தையம் பிடிக்கும் விடுதிகள் மற்றும் இரவு களியாட்ட விடுதிகள் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குறுகிய இடத்தில் அதிகமானவர்கள் கூடுவதினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதினால் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
