கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான PCR பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க இன்று (18) நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளுக்கு 6000ம் ரூபாவுக்கு மேல் அறவிடக் கூடாது என்பதுடன், பரிசோதனைகளின் முடிவுகளை 24 மணி நேரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
