பள்ளிவாயல்கள் உள்ளிட்ட அனைத்து மத ஸ்தானங்களையும் ஜுன் 08ம் திகதிக்கு பின்னர் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வணக்கத் தளங்களை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும் கூட்டு பிரார்த்தனைகளுக்காக அனுமதிப்பது தொடர்பில் எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்பட வில்லை.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
