Our Feeds


Sunday, May 17, 2020

www.shortnews.lk

புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள சுகாதார அமைச்சு

 

போதைப்பொருள் பழகத்திற்கு உள்ளானவர்களை அதிலிருந்து மீட்பதற்காக கொழும்பை மையமாகக் கொண்டு, விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை என்பன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

ஜாஎல - சுதுவெல்ல மற்றும் நாகலகம் வீதி முதலான இடங்களில் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியமை காரணமாக, கொழும்பு வாழைத்தோட்டம் மற்றும் குணசிங்கபுர முதலான பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 11 வைத்தியசாலைகளை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »