கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர் ஒருவரை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து அங்கிருந்த மூன்றரை கோடி ரூபாவை கொள்ளையிட்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிய நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஊழியர்களின் மேலதிக நேர வேலைக் கொடுப்பணவுக்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டிருந்தது.
மருதானை பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
