Our Feeds


Wednesday, July 22, 2020

www.shortnews.lk

கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

 



எல்பிட்டிய, கனேகொட பகுதியில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து போரொ 12 வ​கை துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 6, உள்நாட்டு துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு ஒன்று, ரி56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 23 மற்றும் அதற்கான மெகசின் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக 3 வாள்கள், இராணுவ சீருடை ஒன்று மற்றும் இராணுவ மேலாடைகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »